NALAIYA VARALARU
வால்பாறை பகுதியில் பெய்து வரும் கனமழை!
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு!!
கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்கு உட்பட்ட வால்பாறையில் இடியுடன் கனமழை பெய்து வருவதினால் திடீரென்று ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வால்பாறை அடுத்துள்ள நீராறு அணை பகுதிகளில் தண்ணீர் அதிகரித்தது. மீண்டும் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு மற்றும் மழையினால் மந்தமான நிலையில் வியாபாரங்கள் இருப்பதினால் வியாபாரிகள் கவலை. மற்றும் வால்பாறையில் மழையின் காரணமாக மந்தமான வானிலை காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சோலையார் அணை பகுதிகளில் கிடுகிடுவென தண்ணீர் அதிகரித்து உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த மழையின் காரணமாக வால்பாறை பகுதியை சுற்றிலும் தேயிலை செடிகள் பச்சை பசேல் என்று பசுமையாக காட்சியிருக்கின்றன. மேலும் தேயிலை உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.