NALAIYA VARALARU
விளாத்திகுளத்தில் இசை மாமேதை நல்லப்ப சுவாமிகள் 59ஆவது நினைவு நாள் !!!
விளாத்திகுளத்தில் நல்லப்ப சுவாமிகள் 59வது நினைவு நாளை முன்னிட்டு விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்திற்கக்கு எதிராக சாலையம் தெருவில் உள்ள இசை மாமேதை நல்லப்ப சுவாமிகள் நினைவு தூண் மற்றும் நினைவிடத்தில் நல்லப்ப சுவாமியின் 59ஆவது நினைவு நாள் குருபூஜை விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மற்றும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வில் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநில தலைவர் வரதராஜன், நூலாசிரியர் சிவகுமார், வம்சாவளி பால்ராஜ், பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அயன் ராஜ், பேரூராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இம்மானுவேல், வார்டு கவுன்சிலர் குறிஞ்சி, வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் மற்றும் இசைக்கலைஞர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.