NALAIYA VARALARU
வெள்ளலூரில் நடந்த கைப்பந்து விளையாட்டு போட்டி வீரர்களை உற்சாகப்படுத்திய மாநகரா கமிஷனர்..!!
கோவை மாவட்டம் போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வாலிபால் என்ற விளையாட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் போத்தனூர் டி3 காவல் துறையினர் கலந்து கொண்டு மாணவர்களோடு விளையாடி உற்சாகப்படுத்தினர். இந்த விளையாட்டு போட்டியில் மூன்று அணியினர் கலந்து கொண்டனர். இதில் ரத்தினம் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசை தட்டிச் சென்றனர். அடேங்கப்பா ஆறு பேர் என்ற அணியினர் இரண்டாம் பரிசையும் போத்தனூர் காவல்துறையினர் மூன்றாம் பரிசையும் ப்ளூ ஸ்டார் அணியினர் நான்காவது பரிசையும் பெற்றுள்ளனர்.
இதில் வெற்றி பெற்ற ரத்தினம் கல்லூரி அணியினருக்கு மற்றும் வெற்றி பெற்ற அணியினருக்கும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அவர்கள் வெற்றி கோப்பையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் சதீஷ் அவர்களும் போத்தனூர் காவல் ஆய்வாளர் நடேசன் அவர்களும் மற்றும் உதவி ஆய்வாளர்களும் காவல்துறையினரும் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய கமிஷனர், இது போன்ற மாணவர்கள் எல்லா பகுதிகளிலும் உற்சாகத்துடன் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தேவையில்லாமல் பொழுதைப் போக்குவது மற்றும், செல்போனில் தங்களது பொன்னான பொழுதை கழிப்பது கூடாது என்றும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மனதை ஒருநிலைப்படுத்தி மற்ற…. தவறுகளை தவிர்த்து வாழ வேண்டும் என்று அறிவுரையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த 13 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பச்சையம்மாள் அவர்களின் மகன் சுந்தரலிங்கம், உதயசூரியா, பாபுபாய், ரகுமான், சூர்யா மற்றும் கழக தோழர்கள், தோழிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இவர்களையும் மாநகர ஆணையர் அவர்கள் பாராட்டி சென்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.