கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோவையை சேர்ந்த ஆயில் கடை உரிமையாளர் அனித் நிர்மல் ராஜ் என்பவர் ரூ. 6. 80 லட்சத்துக்கு ஆயில் வாங்கியுள்ளார்.
பின்னர் அதற்கு உண்டான தொகைக்கு 5 காசோலைகளை, நிறுவனத்தினரிடம் கொடுத்தார், அவர்கள் அந்த காசோலையை வங்கியில் செலுத்தி ரூ. 2 லட்சம் எடுத்தனர். மீதமுள்ள 4 காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பியது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை தொடர்ந்து நிறுவனத்தினர் அனித் நிர்மல் ராஜிடம் நீங்கள் கொடுத்த காசோலைகளில் பணம் இல்லை. எனவே மீதமுள்ள ரூ. 4. 80 லட்சத்தை கொடுக்குமாறு கேட்டனர். ஆனால் அவர் பல்வேறு காரணங்களை கூறி பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இது குறித்து ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் நடராஜன், போத்தனூர் போலீஸ் நிலையத்தில் நேற்று, புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் அனித் நிர்மல் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.