தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19-ம் தேதி வெளியானது. ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.66 சதவீதம் மாணவிகளும், 88.16 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்வு தேர்ச்சியடையாத மாணவர்கள் இன்று (மே 23) முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் மே 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
10ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதேபோல இந்த கல்வி ஆண்டுக்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு 11ஆம் தேர்வு தேர்ச்சியடையாத மாணவர்கள் இன்று (மே 23) முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தட்கல் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் மே 31 வரையும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு dge.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-அண்ருகுமா.ர் கிணத்துக்கடவு.