ஒட்டப்பிடாரத்தில் இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை!!!
ஒட்டப்பிடாரம் பகுதிகளில் கோடை வெயிலுக்கு இடையே இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்துள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அனல் தாங்க முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
குறிப்பாக 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இருப்பினும் அவ்வபோது கோடை மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மாலை நேரங்களில் மிதமான மழை பெய்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதற்கிடையில் தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியில் சுழற்சி நிலவுவதால் அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஒட்டப்பிடாரத்தில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை 6 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை பசுவந்தனை , புதியம்புத்தூர், புதுக்கோட்டை, குறுக்குச்சாலை ஆகிய பகுதியில் பெய்ய தொடங்கியது. குறிப்பாக ஒட்டப்பிடாரம் முழவதும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டியது.
சுமார் 2 மணி நேரம் வரை மழை நீடித்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலத்த மழை காரணமாக வாகன ஓட்டிகள் மின்விளக்குகளை ஒளிரச் செய்தபடி சென்றனர். மேலும், பலத்த மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.