ஒட்டப்பிடாரத்தில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கம் கூட்டம் !!!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள இந்நிலையில், அரசு ஊழியர், ஆசிரியர், மாணவர், மகளிர், விவசாயிகள், தொழிலாளிகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியார் நலன் பேணும் அரசாக திமுக அரசு திகழ்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த அரசின் சிறப்புகளையும், மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் சீர்மிகு திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டநத்தம் விநாயகர் கோவில் திடலில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாருமான உயர்திரு எம் சி.சண்முகையா அவர்கள் தலைமையிலும் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் திரு எல்.ரமேஷ் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர் திரு எம்.சிவராஜ் அவர்கள் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டுகள் சாதனைகள் குறித்தும் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் அனைத்து ஒன்றிய கழக நிர்வாகிகள் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் அனைத்து கிளைக்கழக நிர்வாகிகள் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி