ஒட்டப்பிடாரம் அருகே அரசு மாணவர் விடுதி திறப்பு விழா!!!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே மேட்டூர் கிராமத்தில் அரசு மாணவர் விடுதி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
ஒட்டப்பிடாரம் மேட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிட நல மாணவர் விடுதியை தாட்கோ செயற்பொறியாளர் து.பால்ராஜ் திருநெல்வேலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விடுதியின் சிறப்பு அம்சங்கள்:
தரைத் தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம், ஹெட் ரூம் என 855 ச.மீ பரப்பளவில் ரூ.251.21 இலட்சம் மதிப்பீட்டில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.
100 மாணவர்கள் தங்கும் வகையில் 9 அறைகளுடன் சுகாதாரத்துடன் இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது. சாப்பிடுவதற்கு மேசை இருக்கைளுடன் கூடிய உணவுக்கூடமும் , சமையல் தயாரிக்க சுகாதாரமான சமையலறையும், நவீன வசதிகளுடன் குளியல் மற்றும் கழிப்பறைகள் ,சூரிய ஒளி மின் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விடுதியினை சுற்றி நான்கு பக்கமும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த விழாவில் ஒட்டப்பிடாரம் ஒன்றிய பெருந்தலைவர் L. ரமேஷ் அவர்கள் மாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்ராஜ், ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா , மாவட்ட ஆதிதிராவிட துணை அமைப்பாளர் சுகுமார் , கொடியன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் பாஞ்சாலங்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லதா கருணாநிதி , கவுன்சிலர் சித்ராதேவி சண்முகராஜ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.