கோவையில் கனமழை:
கோவை வடவள்ளி பகுதியில் நேற்று இரவு காற்றுடன் கனமழை பெய்தது. மழையின் காரணமாக சுமார் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. அபிராமி நகர் பகுதியில் மரம் விழுந்ததில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்தது.
மேலும் எஸ். பி. கே. நகர், அருண் நகர், எம். ஜி. ஆர் நகர், ராகவேந்திரா நகர், மகாராணி அவென்யூ உள்ளிட்ட பகுதியில் மரம் விழுந்தது. மேலும் பலத்த காற்று வீசியதால் மருதமலை சாலையில் உள்ள தனியார் தியேட்டர் முன்பு வைக்கப்பட்ட தகரம் சாய்ந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் வடவள்ளி சுற்றுவட்டார பகுதியில் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதேபோல வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் தவித்தனர். இன்று காலை முதலே மாநகராட்சி ஊழியர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.