கருங்காலக்குடி அருகே நகை, பணத்துடன் இளம்பெண் மாயம்! காவல்துறை தீவிர விசாரணை!!

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், வஞ்சி நகரம் அருகே உசிலம்பட்டியை சேர்ந்தவர்கள் உடையப்பன் – லட்சுமி தம்பதி. உடையப்பன் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர்களிருவருக்கும் கடந்த 26 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ரஞ்சனா, ரங்கீலா மற்றும் பாலமுருகன் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இவர்களது இரண்டாவது மகள் ரங்கீலா (வயது 20), மேலூர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார்,
இவர் கருங்காலக்குடி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞருடன் கடந்த ஆறு மாதங்களாக தீவிரமாக காதல் வயப்பட்டு இருந்ததாகவும், அதன் தொடர்ச்சியாக கடந்த 18.05.2023 அன்று இரவு தனது வீட்டிலிருந்த பத்து பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு அந்த இளைஞருடன் வீட்டைவிட்டு மாயமானதாகவும் கூறப்படுகிறது. மறுநாள் காலையில் மகள் ரங்கீலா வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடியும் ரங்கீலா கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் மனமுடைந்த இளம்பெண்ணின் தாயார் லட்சுமி, மாயமான தனது மகள் ரங்கீலாவை கண்டுபிடித்துத் தருமாறு கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் பேரில் கொட்டாம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கண்ணன் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை செய்து வருகிறார். கல்லூரி மாணவி ஒருவர் நகை, பணத்துடன் மாயமான சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-தமிழரசன்.மேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp