கோவை தமுமுக சார்பில் திரையரங்கம் முற்றுகை போராட்டம்!!

கோவை தமுமுக

கோவை தமுமுக சார்பில் திரையரங்கம் முற்றுகை போராட்டம்!!

“தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் கோவையில் திரையிடபடுவதைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோவை மத்திய மாவட்டம் சார்பில் புரூக் ஃபீல்ட் மால் திரையரங்கம் முன்பு முற்றுகைப் போராட்டம் மாவட்ட தலைவர் சர்புதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த போராட்டத்தில் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்கள் மூலம் எடுக்கப்படும் திரைப்படங்கள் தடுக்கப்பட வேண்டும் என்று கோவையில் திரையரங்கத்தில் தி கேரளா ஸ்டோரி படம் திரையிடக்கூடாது என்பதை எல்லாம் வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டு இறுதியாக அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைவரும் ஜும்மா தொழுகை நிறைவேற்றி அமர்ந்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் மாநிலப் பிரதிநிதி சாதிக் அலி, இ.அஹமது கபீர் MC, தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் சிராஜ்தீன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பேக் அப்பாஸ், சாகுல் ஹமீது, மொய்தீன் சேட், துணைத் தலைவர் நூர்தின், துணைச் செயலாளர்கள் அசாருதீன், ஹாரூன் ரஷீத், பைசல் ரஹ்மான், புலவர் பாபு , அணி நிர்வாகிகள் ஜியாவுல் ஹக், அபுதாஹிர், அசாருதீன், யூசுப், செரீப் மற்றும் கிளை நிர்வாகிகள் என நூற்றுக்கணக்கான பேர் கலந்து கொண்டனர்!!!

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப்
கோவை தெற்குமாவட்ட தலைமை நிருபர்
9360533469

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp