சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் வான ஓட்டிகள் கடும் அவதி!! உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!!

 

கோவை மாவட்டம் குனியமுத்தூர், உக்கடம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். அப்பகுதியை கடப்பதற்குள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போதும் போதும் என்றாகி விடும். இப்படி போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியிலும் அந்த சாலைகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் சாலைகளில் வருபவர்கள், மாடுகளை பார்த்து பயந்து, கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலை உள்ளது. சில நேரங்களில் விபத்துக்களில் சிக்கி விடுவதும் வாடிக்கையாகி வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது ; மாடுகளை வளர்ப்பவர்கள் வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும். இது போன்று சாலையில் சுற்றி திரிய விடக்கூடாது. சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து கோவை மாநகராட்சியினர் பட்டியில் அடைக்க வேண்டும். மேலும் அந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே சாலையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்த முடியும். ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் உக்கடம் பஸ் நிலையம் அருகே மாடுகள் சுற்றித் திரிவது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த நிலையானது தற்போது அல்ல காலகாலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் தடுமாறி கீழே விழுவதை அன்றாடம் காண்கிறோம். எனவே கோவை மாநகராட்சி விரைந்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp