தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு நடுமாடு, சிறிய, பூஞ்சிட்டு என 3 வகையான மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள வீரசக்கதேவி ஆலய 67வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை பாஞ்சாலங்குறிச்சி ஆலய விழா குழு சார்பில் மாட்டு வண்டி போட்டிகள் நடத்தப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த மாட்டு வண்டிப் பந்தயத்தை ஆலயக்குழ துணை செயலாளர் முருகபூபதி மற்றும் A K செந்தில் குமார் இளைய ஜமீன் வைப்பார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
8 வண்டிகள் கலந்து கொண்ட நடுமாடு மாட்டு வண்டி போட்டி 10 மைல் தூரம் நடைபெற்றது. இதில் வேலங்குளம் கண்ணன் என்பவரது மாடு முதலிடமும் சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் என்பவரது மாடு இரண்டாம் இடமும் குமரெட்டி யாபுரம் மாடு மூன்றாவது இடமும் பிடித்தது.
இரண்டாவதாக நடைபெற்ற சிறிய மாட்டு வண்டிப் போட்டி ஆறு மைல்தூரம் நடைபெற்றது இதில் 19 வண்டிகள் கலந்து கொண்டன இந்த போட்டியில் சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் என்பவரது வண்டி முதலான வேலங்குளம் கண்ணன் என்பவர் வண்டியில் இரண்டாம் இடம் பிடித்தது பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 20 வண்டிகள் கலந்து கொண்ட ஐந்து மைல் தூரம் இந்த போட்டியில் ஆதனூர் செல்வம் முதலிடம் பிரித்தது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.