கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கம்பம் மெட்டு பகுதியில் கடந்த 7- ம் தேதி பிறந்த குழந்தை கழிவறையில் இறந்து கிடந்தது குழந்தையின் பெற்றோர் யாரென்று விசாரிக்கும் பொழுது கம்பம் மெட்டில் வசித்து வரும் வட மாநில வாசிகளான சாதுராம் மற்றும் மாலதி என்ற தம்பதியினரின் குழந்தை என தெரியவந்தது . அவர்களை விசாரித்த பொழுது குழந்தை பிறக்கும் பொழுதே இறந்ததாகவும் அதனால் கழிவறையில் வைத்திருந்ததாகவும் கூறினர்.
உடனடியாக சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்த பொழுது குழந்தை கழுத்து நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்திய பொழுது சாதுராம் மற்றும் மாலதி தம்பதியினர் குழந்தை பிறக்கும் பொழுதே இறந்ததாக காவல்துறையினரிடம் அருகில் வசித்து வரும் போது மக்களிடமும் கூறியுள்ளனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கழுத்தை நெரித்து கொன்றதற்கான காரணத்தை அறிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது தான் உண்மை அம்பலமானது. அவர்கள் இரண்டு பேரும் போலியான தம்பதிகள் என்றும் அவர்கள் இரண்டு பேரும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் வேலை நிமித்தமாக இரண்டு பேரும் வந்து ஒன்றாக தங்கி உள்ளதாகவும் அவர் கர்ப்பமடைந்தது அருகில் உள்ள யாருக்கும் தெரியாது என்றும் இதனால் குழந்தை பிறந்தவுடன் என்ன செய்வது என்று அறியாது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாகவும் ஒப்புக்கொண்டனர்.உடனடியாக காவல்துறையினர் இருவரையும் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணார்.