முப்புலிவெட்டியில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் அருகே முப்புலிவெட்டி கிராமத்தில் ஸ்ரீ சந்தனமாரியம்மன்,ஸ்ரீ உச்சினிமாகாளியம்மன் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு 8 ஆம் நாள், நிகழ்ச்சியாக 20 ஆம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான மின்னொலி கபடி போட்டி நடைபெற்றது.
இந்த கபடி போட்டியில் மொத்தம் 25 மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியினை ஊர் தலைவர் மு.முத்துவேல் தொடங்கி வைத்தனர்.
இந்த போட்டியில் முதல் பரிசினை புதூர் கொடி பிரதர்ஸ் கபாடி குழு அணி வெற்றி பெற்றது. 2 ஆம் பரிசினை SYFC சிவாஞனபுரம் அணி வென்றது. 3 ஆம் பரிசினை ஜெயசேகர் முப்புலிவெட்டி அணி வென்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த கபடி போட்டியில் முதல் 8 இடங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறந்த ரைடர்ஸ் மற்றும் பிடியாளர்ருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. இறுதிப்போட்டியில் விளையாடிய இரு அணிகளுக்கும் LED TV பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் முதல் பரிசு ரூபாய் 35,001 ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவன், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபாடி கழக துணைத் தலைவர் இளையராஜா வழங்கினார். பரிசுக்கான சுழற்கோப்பையை க.முருகன் செயலாளர் முப்புலிவெட்டி அவர்கள் வழங்கினார்.
இரண்டாம் பரிசு ரூபாய் 30001 S.B சதிஸ் டிரான்ஸ்போர்ட் எர்த்மூவர்வஸ் தென்னக ரயில்வே முப்புலிவெட்டி மற்றும் எட்டாம் பரிசு 8001 வைலட் ராஜா அதற்கு பரிசுக்கான கோப்பையை ரா.கனகராஜ் தொழில் அதிபர் அவர்கள் வழங்கினார்.
இவ்விழாவில் ஊர் செயலாளர் சண்முகராஜ் பொருளாளர் தமிழ்மாறன் மற்றும் ஜெய சேகர் காபடி குழ ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீதர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து இருந்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.