வாகனத்தின் மீது விழுந்த இராட்சத கல்! – நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதியில் உடுமலை மூணார் சாலையில் நேற்று சுமார் 12 மணி அளவில் ராஜமலை பகுதியில் சுற்றுலா பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் மூணாரை நோக்கி வந்து கொண்டிருந்த காரின் மீது திடீரென ஒரு பெரிய பாறை பகுதியில் இராட்சத கல் ஒன்று உருண்டு வந்து காரில் விழுந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காரை ஓட்டி வந்த சூறியநல்லி பகுதியை சேர்ந்த ஓட்டுநர் அந்தோணி ராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார். இதனை அருகில் நுங்கு விற்றுக் கொண்டிருந்த விற்பனையாளர் மட்டுமே இதைக் கண்டுள்ளார். அவர் கூறியதாவது:- திடீரென்று ஒரு சத்தம் கேட்டது சிறு சிறு கற்கள் வந்து விழுந்தன மேலே பார்த்த பொழுது வெள்ளை மேகமூட்டம் போன்று இருந்தது திடீரென்று ஒரு பெரிய 500 டன் எடையுள்ள ஒரு பாறை இரண்டாக உடைந்து இரண்டு பாகத்தில் போய் விழுந்தது. அதில் ஒரு பாறை நேராக சாலையில் வந்து விழுந்தது. அது காரின் மேல் பட்டதால் அதை ஓட்டி வந்தவரின் காலில் பலத்த அடிபட்டது.
உடனடியாக காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வாகனத்தில் சிக்கிய அந்தோணி ராஜை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்
மூணார்.