கோவை மாவட்டம் வால்பாறை பகுதியானது தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சுற்றுலா தளமாகும். இவ்வாறு பரபரப்பாக இயங்கும் சுற்றுலா தளமானது தற்போது மிகவும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். வால்பாறையை சுற்றியுள்ள அண்ணா நகர் கோ ஆப்பரேட்டிவ் காலனி கக்கன் காலனி பி ஏ பி போன்ற பகுதிகளில் குப்பை கழிவுகள் சரிவர அகற்றப்படாமல் தேங்கி துர்நாற்றம் அடிக்கும் சூழ்நிலையில் உள்ளது.
இது பற்றி நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தால் முறையான பதில் கிடைப்பதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வால்பாறை பகுதியில் இதுபோன்று துர்நாற்றம் வீசும் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்ற பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.