ஆட்டோவில் சென்ற இளைஞரை வழிமறித்து வழிப்பறி !!
காவல்துறையினர் கைது நடவடிக்கை !!!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர் சுரேஷ் என்பவரது மகன் 21 வயதான சுஜித். திருமணமாகாத இவர் எலக்ட்ரீசியன் படிப்பு முடித்துவிட்டு பெயிண்டராக பணிபுரிந்து வந்தார்.
சரியான வேலை கிடைக்காததால் இவர் கோவை போத்தனூர் அடுத்த பிள்ளையார்புரம் பகுதியில் அவருக்கு தெரிந்த நபர் ஒருவர் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருவதாகவும் கோவைக்கு வந்தால் வேலை ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி இருக்கிறார். இதை தொடர்ந்து அவர் நேற்று ரயில் மூலம் கோவைக்கு வந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் ஆட்டோ மூலம் வெள்ளலூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த இரண்டு நபர்கள் சுஜிதிடமிருந்து செல்போனை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து சுஜித் போத்தனூர் காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சுஜித்திடமிருந்து செல்போனை பறித்தது, பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்த பாலன் என்பவரின் மகன் 34 வயதான நாகராஜ், என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நிக்சன் என்பவரை தேடி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.