கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி 7-வது வார்டு எரிபதி நகரில் அமைந்துள்ள குடிநீர் கிணற்றின் சுற்றி பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் பாதுகாப்பு இல்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்தக் கிணற்றுக்கு பாதுகாப்பு வளையம் இல்லாததால் வயதான பெரியோர்கள் விழுந்து இறந்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இப்பகுதி குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் என பொதுமக்கள் அதிகம் வசிக்கின்ற ஒரு பகுதி ஆகும்.
இந்நிலையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்டதால் இந்த கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாய கட்டத்தில் உள்ளது இப்பகுதி பொதுமக்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்கின்ற அச்சம் இப்பகுதி மக்களுக்கு எழுந்துள்ளது.
இப்பகுதி மக்களின் அச்சத்தை போக்கிட பேரூராட்சி செயலாளர் தனி கவனம் செலுத்தி காலதாமதம் செய்யாமல் உடனடியாக தடுப்புச் சுவர் மற்றும் இரும்பு மூடி அமைத்துத் தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் அன்பான வேண்டுகோளாக உள்ளது.
-M.சுரேஷ்குமார்.