ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடங்களில் குறைகிறதா முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம்? அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்!!

ஐஏஎஸ், ஐபிஎஸ்

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடங்களில் குறைகிறதா முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம்? அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்!!

ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெறும் முஸ்லிம்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் பிற உயர் பதவிகளுக்குரிய தேர்வுகளை நடத்துகிறது. குறைந்த எண்ணிக்கையிலான காலியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் போட்டியிடுகின்றனர். இத்தேர்வுகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் 2022ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்வுகளில் வெற்றி பெற்ற 933 பேர்களில் 29 பேர் மட்டுமே முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது இத்தேர்வில் 3.1% முஸ்லிம்களே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்தியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் எண்ணிக்கை 17.22 சதவீதமாகும். இவ்வளவு மக்கள் தொகை கொண்ட முஸ்லிம் சமூகத்தினர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உயர் பதவிகளுக்கு வருவது ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முஸ்லிம்களின் எண்ணிக்கை 3.64% ஆகும். கடந்த 2016ஆம் ஆண்டு தேர்வுகளில் வெற்றி பெற்ற முஸ்லிம்களின் எண்ணிக்கை 4.73%ஆக இருந்து 2017-ம் ஆண்டு 5,10%ஆக உயர்ந்தது.

கடந்த 2018ஆம் ஆண்டு 3,68%ஆகக் குறைந்தது. 2019ஆம் ஆண்டு 5.30%ஆக சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறும் முஸ்லிம்களின் எண்ணிக்கை உயர்ந்து.
2020ஆம் ஆண்டு 4.07%,
2021ஆம் ஆண்டு 3.64%,
2022ஆம் ஆண்டு 3.10% எனக் குறைந்துள்ளது.
எனவே முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் வெகுவாக குறைந்து வருவது என்பது சமூக நீதியை பாதிக்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள உயர் பதவிகளில், ஒரு பிரிவு சமூக மக்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வருவதை, ஒன்றிய அரசு மட்டுமின்றி சிவில் சமூக அமைப்புகளும் கவலையுடன் பரிசீலிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலூர் நிருபர் – தமிழரசன்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp