தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது அதிர்ஷ்டவசமாக பாணிகள் அனைவரும் தப்பினர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வசந்தம் நகர் பகுதியை சார்ந்த சின்னத்தம்பி மகன் கார்த்திக் வயது 26, இவர் தனியார் பேருந்து டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதே பகுதியை சேர்ந்த திரவியம் மகன் கருப்புசாமி இவர் அதே பேருந்தில் நடத்துனர் ஆக பணிபுரிந்து வருகிறார். கார்த்திக் வழக்கம்போல் தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி நோக்கி பேருந்தை இயக்கி வந்தார்.
ஓட்டப்பிடாரம் பள்ளிவாசல் அருகே வளைவில் எதிரே வந்த லாரியில் மோதாமல் இருக்க விலகிய போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எதுவும் நடைபெறவில்லை பேருந்தில் 25 பயணிகள் இருந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து அறிந்த ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர் பின்னர் பேருந்தில் பயணித்து அனைவரையும் அரசு பேருந்தில் அனுப்பி வைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.