ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதுவிக்கப்பட்ட RGSA பயிற்சி !!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதுவிக்கப்பட்ட RGSA பயிற்சி 2023-24 திட்டத்தின் கீழ் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கிராம ஊராட்சிகளின் மொத்தம் 61 ஊராட்சிகளில் ஒவ்வொரு ஊராட்சிகளில் இருந்து 4 உறுப்பினர்கள் வீதம் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 9 கருப்பொருள்களின் அடிப்படையில் இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்பட்டு மூன்றாவது நாள் முன்மாதிரியான பஞ்சாயத்துக்கு சென்று களப் பயிற்சியாக வார்டு உறுப்பினர்களை அழைத்துச் சென்றார்கள் இதன் மூலம் தங்களுடைய கிராமத்திலும் சிறந்த ஆளுமை கொண்ட ஊராட்சியாய் உருவாக்குவோம் என உறுதிமொழி எடுத்தனர்.

ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எஸ். ரமேஷ் அவர்கள் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட புத்தகம் மற்றும் கையேடு அடங்கிய பைகள் வழங்கினார். உடன் கொடியன்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் கலந்து கொண்டார். இந்த பயிற்சி நிகழ்ச்சி மாநில முதன்மை பயிற்றுநர் A. கலா மற்றும் மாநில முதன்மை பயிற்றுநர் K. அழகு நாச்சியார் தலைமையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp