தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் புதியம்புத்தூர் கிராமம் அமைந்துள்ளது. புதியம்புத்தூர் கிராமம் மிகவும் மக்கள் நெருக்கம் கொண்ட பகுதியாக உள்ளது. ஆயத்த ஆடை தயாரிப்பு மற்றும் சிறு குறு தொழிலுக்கு மிகவும் பெயர் பெற்றதாகும். புதியம்புத்துரை குட்டி திருப்பூர் என்று அழைப்பார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழ்நாட்டிலே ஆயத்த ஆடை தயாரிப்பில் முதன்மை பகுதியாக உள்ளதால் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக புதியம்புத்தூர் பிரதானச் சாலையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் புதியம்புத்தூர் ஓட்டப்பிடாரம் நெடுஞ்சாலை மிக மிக குறுகி கொண்டே வருகிறது. இதன் காரணமாக காலை மாலை வேலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது, சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது.
புதியம்புத்தூர் ஓட்டப்பிடாரம் சாலையில் சட்டத்துக்கு புறம்பான கட்டிடங்களை அகற்றக்கோரி பல்வேறு ஆண்டுகளாக பொதுமக்களும் பல்வேறு சமூக அமைப்பும் போராடி வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை , இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மிக அலட்சியமாக வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.
சில சமயங்களில் கடுமையான போக்குவரத்தால் அவசர ஊர்தி செல்ல முடியாத நிலை. இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு போக்குவரத்து காவலர் கூட இல்லை. மேலும் பெண்கள், நோயாளிகள் முதியோர்கள் , பள்ளி குழந்தைகள், அலுவலகப் பணிக்கு செல்வர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.