காட்டு யானை தாக்கியதில் வனத்துறையினர் காயம்!!

காட்டு யானை

காட்டு யானை தாக்கியதில் வனத்துறையினர் காயம்!!

கோயம்புத்தூர் வனச்சரகம் மற்றும் மதுக்கரை வனச்சரகத்தில் 30க்கும் மேற்பட்ட யானைகள் தற்போது முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகே உள்ள கிராம பகுதிக்குள் நுழைந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு மதுக்கரை வனச்சரகம் ஆலந்துறை பகுதியில் ஒற்றை ஆண் யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி சிறுவாணி – கோவை சாலையை நோக்கி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வனக் காப்பாளர்கள் சந்திரிகா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டச் சென்றனர்.

அப்போது ஆலந்துறை அடுத்த முகாசிமங்கலம் பகுதியில் வனத்துறையினர் யானையை தேடிக்கொண்டிருந்த போது திடீரென புதர் மறைவில் இருந்து வந்த ஒற்றை ஆண் யானை வனத்துறையினர் சென்ற ஜிப்பை தந்தத்தால் குத்தி தள்ளியது. இதில் வனத்துறையினர் சென்ற ஜீப் தலைகீழாக கவிழ்ந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த விபத்தில் இரண்டு பேர் லேசான காயமடைந்தனர் இதனை அடுத்து அவர்கள் கூச்சல் இட்டதால் அந்த யானை அங்கிருந்து வெளியேறியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து ஜிப்பில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் பலத்த காயம் ஏற்படாமல் நூலிழையில் உயிர் தப்பினர். இதனை அடுத்து சிறுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். கோவையில் காட்டு யானையை விரட்ட சென்ற வனத்துறையினர் யானை தாக்கியதில் காயமடைந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp