காயாமொழியில் தீண்டாமை வேலியே அகற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி காயாமொழி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை வேலியை அகற்ற மூன்று குடும்பங்களை சேர்ந்த அருந்ததியர் மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு இம்மண்ணில் உரிமையோடு வாழ்வதற்கு ஒரு இடம் கிடையாது. காயாமொழி கிராமத்தில் சர்வே எண் 604-ல் 1B அரசு புறம்போக்கு நிலம் அதில் எங்கள் குடும்பத்தினால் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஓலை குடியிருப்பு அமைத்து வாழ்ந்து வருகிறோம். காயாமொழி கிராமத்தில் இயங்கி வரும் ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் அமைப்பு எங்களை இடத்தை காலி பணி சொல்லி வற்புறுத்தி வருகிறார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

31.05.2023 முதல் எங்களை வெளியில் செல்ல விடாமல் முள்வேலி அமைத்துள்ளனர். எங்கள் குடிசைக்கு ஊர் பஞ்சாயத்து தலைவர் 2022 ஆம் ஆண்டு வீட்டிற்கு தீர்வை இரசீது கொடுத்து மின் இணைப்பு கொடுத்துள்ளார். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதித்தனர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் அமைப்பினர் எங்கள் வீடுகளை காலி செய்ய சொல்லி துன்புறுத்தி வருகிறார்கள்.

இந்த முள்வேலி அகற்றி அருந்ததியின மக்களுக்கு அந்த இடத்திற்கு பட்டா வழங்க வேண்டி ஆதித்தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஊர்காவலன் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp