கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில், கரியாம்பாளையம் அருகே மெயின் ரோட்டில், மூன்று வாரங்களுக்கு முன், 30 அடி உயரம் உள்ள மரம், சுழல் காற்று மற்றும் மழையால் முறிந்து விழுந்தது.
இதையடுத்து நெடுஞ்சாலை துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம், மரத்தை நெடுஞ்சாலையில் இருந்து அகற்றி ஒட்டி உள்ள மண் சாலையில் போட்டது. அதன் பிறகு இந்த மரம் வெட்டி அகற்றப்படவில்லை. இதனால் சாலையின் கிழக்கு புறத்தில் உள்ள தோட்டங்களுக்கு விவசாயிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அந்த தோட்டங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் மூன்று வாரங்களாக, இரண்டு கி. மீ. , தூரம் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.