கால்நடை வளர்போருக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம்!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டம் கால்நடைத்துறை சார்பில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கால்நடை வளர்ப்புக்கான விழிப்புணர் பயிற்சி முகாம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அஸ்காட் திட்டம் 2021-22 ஊராட்சி ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு பயிற்சி முகாம் கோவில்பட்டி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மரு. விஜய ஸ்ரீ அவர்களின் தலைமையில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு முகாமில் ஓட்டப்பிடாரம் அது சுற்றி வட்டார பகுதியில் இருந்து கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர் கால்நடை வளர்ப்போருக்கு ஓட்டப்பிடாரம் ஒன்றிய கால்நடை உதவி மருத்துவர் யமுனா அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள் மற்றும் புதியம்புத்தூர் கால்நடை உதவி மருத்துவர் கௌரிசங்கர் அவர்கள் கால்நடை வளர்ப்பது பற்றி விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.

நடமாடும் கால்நடை ஊர்தி தமிழக அரசால் அறிமுகப்படுத்தியுள்ளது 1962 என்ற எண்ணுக்கு அழைத்தால் வீடு தேடி கால்நடை மருத்துவர்கள் வருவார்கள் மற்றும் உதயமித்ரா என்ற செயலின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இந்த செயலின் மூலம் அருகில் உள்ள கால்நடை மருத்துவர்களை கண்டறியலாம்.

இந்த விழிப்புணர் முகாமில் கால்நடை ஆய்வாளர் பண்டார சுந்தரி கால்நடை பராமரிப்பு உதவியாளர் மாடசாமி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் விழிப்புணர்வு முகாமுக்கு வந்திருந்த மக்களுக்கு போக்குவரத்து உதவி ரூபாய் 50 வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp