குப்பை கழிவுகளால் நிரம்பி வழியும் வால்பாறை!! உடனுக்குடன் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!!!

கோவை மாவட்டம் வால்பாறைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் வால்பாறை பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோரால் போடப்படும் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்றாமல் உள்ளதால் குப்பை கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வால்பாறை நகராட்சிக்குட்பட்ட கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் குப்பை கழிவுகள் அதிகம் உள்ள பகுதியாக காணப்படுகிறது அப்பகுதியில் பல மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு வியாபாரிகளின் கழிவு பொருட்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உண்ணும் உணவு கழிவுகளை அப்பகுதியில் குவித்து வைத்ததினால் துர்நாற்றம் வீசி வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எனவே குப்பை மேடாக காட்சி அளிக்கும் குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற அப்பகுதியை சேர்ந்த எஸ்டேட் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

இதனால் அப்பகுதியில் தொற்று பரவும் அபாயம் உள்ளது மேலும் இதே போன்று பிரதான பூ மார்க்கெட் நெடுஞ்சாலை எதிரே துர்நாற்றம் வீசும் குப்பை அகற்றாமல் இருப்பதினால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை அகற்ற பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். நகராட்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp