தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொல்லங்கிணறு கிராமத்தில் நேற்று காலை புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டினார் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எம் சி சண்முகி அவர்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 9. 13 லட்சத்தில் அமைக்கப்படுகிறது. பின்னர் கொல்லங்கிணறு வடக்கு காலனியில் 9 லட்சம் பதிப்பில் 10000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டினார்.
ஊர் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். முதியோர் உதவித் தொகை 100 நாள் வேலை வாய்ப்பு சம்பளம் உயர்த்தி வழங்குவது என பல்வேறு கோரிக்கைகளை ஒரு பொதுமக்கள் முன் வைத்தனர். ஒரு வார காலத்தில் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி ஆணையர் சிவபாலன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் தனி வட்டாட்சியர் செல்வகுமார் கிராம உதவியாளர் பொறியாளர் மற்றும் கொல்லங்கிணறு ஊராட்சி மன்ற தலைவர் லதா முருகன் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.