கோவையில் புகையிலை பொருட்களின் பயன்பாட்டை குறைக்கவும் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி சுந்தராபுரம் காவல்துறையினர், பிள்ளையார் புரத்திலுள்ள பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்ட போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தது. எனவே கடை உரிமையாளர் சுப்ரமணி, (வயது 67) என்பவர் கைது செய்யப்பட்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அது போல், ஈச்சனாரியில், புதுக்கோட்டையை சேர்ந்த சந்தோஷ், (வயது 23), என்பவரும் சாரதா மில் சாலையில், எஸ். ஐ. , ஜெசிஸ் உதயராஜ் அவர்கள் சோதனையில், வீரசூரபெருமாள், (வயது45) என்பவரும் செட்டிபாளையம் சாலையில், இன்ஸ்பெக்டர் நடேசன் அவர்களின் சோதனையில் நாகராஜ், (வயது37) என்பவரும் சிக்கினர்.
கரும்புக்கடை, கிரீன் பார்க் பகுதியில் எஸ். ஐ. , முருகன் அவர்கள் சோதனையில், ராஜா முஹமது, (வலது 44) என்பவர் சிக்கினார். இவர்களிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.