சட்டவிரோதமாக குழாய் பதிக்கும் ஊராட்சி மன்ற தலைவர்- ராஷ்ட்ரிய இந்து மகாசபா மனு!!
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் பல்லேபாளையம் பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சிவகுமார் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக அவரது விவசாய தொழிலுக்காக அரசிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் குழாய் பதித்து வருவதாக கூறி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஷ்ட்ரிய இந்து மகாசபா அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனு உடன் வந்த அவர்கள் கண்களை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு, குழாய்களை கையில் ஏந்தி அவர்களது கோரிக்கை வலியுறுத்தினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த கோரிக்கை மனு மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் வழங்கப்பட்டது உடன் இந்து மக்கள் புரட்சிப் படை நிறுவனத் தலைவர் பீமா பாண்டி உடன் இருந்தார்.இதுகுறித்து மாநிலத் தலைவர் வேலுச்சாமி கூறுகையில் காரமடை ஒன்றியம் பல்லேபாளையம் பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார், ஆலாங்கொம்பு பகுதியில் இருந்து குமரன் குன்று பகுதி வரை சட்டவிரோதமாக எவ்வித அனுமதியும் பெறாமல் இரவு நேரங்களில் விவசாயத்திற்காக குழாய் பதித்து வருகிறார். இவர் அங்குள்ள அவரது அதிகாரத்தை பயன்படுத்தி இவ்வாறான சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கையில் தோய்வு ஏற்பட்டால், மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள உள்ளோம் என தெரிவித்தார்.
-சீனி, போத்தனூர்.