கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அடுத்துள்ள சின்ன கானல் பஞ்சாயத்துக்குட்பட்ட சூரியநல்லி என்ற பகுதியில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குப்பைகளை எடுக்க பஞ்சாயத்தின் சார்பாக ஆட்கள் வரவில்லை என்றும் குப்பைகளை அகற்ற வேலை ஆட்களும் வாகனங்களும் இருந்தபோதிலும்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குப்பைகளை எடுக்க வருவதில்லை பலமுறை வியாபாரிகள் சங்கத்திலிருந்து புகார் அளித்தும் பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்களை தெரிவித்தும் எந்த ஒரு சரியான முடிவும் எடுக்கவில்லை.
இதனை குறித்து அரசிடம் கேட்கும் பொழுது அவர்கள் கூறும் பதில் கழிவுகளை கொட்டுவதற்கான போதிய இடம் இல்லை என்றும் அங்கு வசிக்கும் மக்களே இடத்தை தர வேண்டும் என கூறுகின்றனர்.
அரசுக்கு உட்பட்ட அனேக நிலங்கள் அங்கு இருந்த பொழுதும் கூட இந்த நடவடிக்கை உடனடியாக இருக்காது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது எனவே அரசியலில் உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் அனைத்து கழிவுகளையும் எடுத்து சுத்தம் செய்ய வேண்டும் என வியாபாரிகள் சங்கத்திலிருந்து பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.