டெலிகிராமில், வந்த லிங்கை நம்பி பணத்தை இழந்தவர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார்!!!
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த அரசூர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் சிங்காரம் இவர் பகுதி நேர வேலைக்காக ஆன்லைன் மூலமாக வேலை தேடியதில் டெலிகிராம் மூலமாக வந்த ஒரு லிங்க் உள்ளே சென்றுள்ளார். அதில் சிறிய அளவிலான வேலைகளை செய்து கொடுத்து அதன் மூலம் சிறுதொகையை முதலீடாக பெற்றுள்ளார். இதனை உண்மை என நம்பியவர் மேலும் முதலீடு செய்து அடுத்த வேலைக்கு செல்வதற்காக 13 பரிவர்த்தனைகள் மூலமாக ரூ. 10, 90, 690/- பணத்தை, செலுத்தி உள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் அதிக வருமானம் வரும் என்று நம்பி பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் தான் தவறான வழிகாட்டுதலில் சென்று மோசடி அடைந்ததை உணர்ந்த சிங்காரம் இது குறித்து கோவை கோபாலபுரம் பகுதியில் உள்ள சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் உடனடியாக துரித நடவடிக்கை எடுதுது. தொடர்புடைய வங்கி கணக்குகளில் இருந்த 43, 99, 711 ரூபாய் பணத்தை முடக்கம் செய்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.