தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்க வாய்ப்பு!!
மே 20ம் தேதி அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது .கேரளாவில் வழக்கம் போல ஜூன் ஒன்றாம் தேதி தென்மேற்கு பருவம் மழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலதாமதம் ஆகியுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஜூன் ஐந்தாம் தேதி தேதிக்கு மேல் பருவமழை தொடங்கினால் அது தாமதமான பருவமழை என்று தெரிவிக்கப்படு.ம் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை கேரளாவில் தொடங்கவில்லை. தென்மேற்கு பருவமழை தொடங்கினால் தமிழகத்தில் வெயில் குறைய தொடங்கும் . இந்நிலையில் அரபிக் கடலில் ஏற்பட்ட காற்று சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் ,தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-அருண்குமார் கிணத்துக்கடவு.