தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதியில் குளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பனையூர் கிராமத்தில் இந்து நடுநிலைப்பள்ளியில் ஊர் நிர்வாகம் மற்றும் பழைய மாணவர்கள் சார்பாக ரூபாய் 1.10-லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட் வகுப்பினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளியின் வளர்ச்சி பணிக்காக ரூ.25000-நிதி உதவி வழங்கினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த பள்ளி நிகழ்ச்சியில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து பள்ளி தலைமை ஆசிரியை மரிய அனிதா தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் ஊராட்சி மன்றத் தலைவர் மாலதி மாவட்ட பிரதிநிதி செல்வப்பாண்டி ஒன்றிய அவைத்தலைவர் கெங்குமணி ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன்
இந்து நடுநிலைப்பள்ளி செயலாளர் ஆதிமாரீஸ்வரன்பள்ளி சங்கத் தலைவர் மாரிச்செல்வம் கிளை செயலாளர்கள் செல்வராஜ், ரீகன் கிளை பிரதிநிதி முத்துராஜ் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பேச்சிமுத்து விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நலஅணி அமைப்பாளர் தர்மநேச செல்வின் உட்பட ஆசிரியர் -ஆசிரியைகள் மாணவ- மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.