பாஜகவின் சிந்தனையாளர்கள் கூட்டம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை சிந்தனையாளர் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் அவர்கள் கலந்து கொண்டார்.

பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை பற்றி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்க வேண்டும் ஜிஎஸ்டின் நன்மைகளைப் பற்றி தெரிவிக்க வேண்டும் 11 வரிகளை ஒழித்து ஒரே வரியாக மோடி அரசு உருவாக்கி உள்ளது வெளியுறவுக் கொள்கையில் மோடி அரசு மிகத் திறம்பட செயல்படுகிறது.

அனைத்து வீட்டிற்கும் குடிநீர் வசதிகள் திட்டம் ஜல்ஜீவன் திட்டம் கிராமங்கள் தோறும் கழிப்பறைகள் , செங்கோலை பாராளுமன்றத்தில் நிரூபி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தது, விவசாயிகளுக்கு பிஎம் கிசான் நிதி உதவி என பல்வேறு சாதனைகளை விளக்கினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த கூட்டத்தில் திரு போத்திஸ் ராமமூர்த்தி அவர்கள் மாநில ஓபிசி அணி துணைத் தலைவர் விவேகம் ரமேஷ் அவர்கள் கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் திரு இளங்கோ அவர்கள் மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் அவர்கள் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் L.கிஷோர் குமார் அவர்கள்,

மாவட்ட செயலாளர் வக்கீல் R. பிரபு அவர்கள் சிந்தனையாளர் பிரிவு மாவட்ட C.லட்சுமணன் அவர்கள், தூத்துக்குடி தெற்கு மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவர் A.மகாராஜன் அவர்கள், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் S. முத்துக்குமார் ராஜா ஆகியோர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. மகளிர் அணி நிர்வாகிகள் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் திரளாக பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp