தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் புளியம்பட்டி மற்றும் அக்கநாயக்கன்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா நேற்று எம் சி சண்முகையா தலைமையில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓட்டப்பிடாரம் அருகில் புளியம்பட்டி புனித அந்தோனியார் திருத்தலங்கள் அமைந்துள்ளது இந்த திருத்தலத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர் புளியம்பட்டி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம் சி சண்முகையா அவர்கள் 2022-23 ஆண்டு 15வது நிதி குழுவில் இருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி க்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் புளியம்பட்டி ஆர் சி நடுநிலை பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி சண்முகையா அவர்கள் வழங்கினார். தொடர்ந்து அக்கநாயக்கன்பட்டியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ரூபாய் 17.40 லட்சம் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் திட்டத்தில் அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன் மற்றும் ராமராஜ் அவர்கள் , கொடியன்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் அவர்கள், அக்கநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் அய்யாதுரை, உதவி பொறியாளர் ரவி , வருவாய் அலுவலர் ரேகா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.