போத்தனுார் மெயின் ரோட்டில், பாரதி நகர் பஸ் ஸ்டாப் அருகே, கேரளாவை சேர்ந்த நிசார் என்பவருக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக, இவ்விடத்தின் முன், சாலையை ஒட்டி டீக்கடை செயல்பட்டு வந்தது.
தற்போது இச்சாலையை நான்கு வழியாக அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதற்காக, சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. டீக்கடையை அகற்ற, நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தாங்களாக முன் வந்து அகற்றாததால், நேற்று நெடுஞ்சாலை துறையினர் டீக்கடையை அகற்ற முயன்றனர். கடை நடத்தி வரும், போத்தனுாரை சேர்ந்த நிசார் எதிர்ப்பு தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் அவர்கள் பேச்சு நடத்தி, இரண்டு மணி நேரத்துக்கு பின் பெட்டி அகற்றப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.