மருதமலை சாலையில் உலா வரும் யானை கூட்டங்கள்! கவனமுடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை!!!

கோவை மாவட்டம் ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகிறது. இந்நிலையில் மருதமலைக்கு செல்லும் பக்தர்கள் மலைப் பாதையில் நடந்து செல்ல மாலை 5 மணிக்கு மேல் அனுமதி இல்லை என்றும், இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் தான் அனுமதி என்றும் வனத்துறை அறிவித்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மருதமலை அடிவாரம் ஐ. ஓ. பி காலனி பகுதியில் யானை தாக்கி குமார் என்பவர் உயிரிழந்த நிலையில் வனத்துறையினர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்நிலையில் வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் யானை நடமாடும் பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி யானை நடமாடும் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் கோவை மருதமலை சாலையில் உள்ள ஐ. ஓ. பி காலனி பகுதியில் நேற்று இரவு யானைக் கூட்டம் சாலையோரம் முகாமிட்டிருந்த நிலையில் இரண்டு குட்டி யானைகள் சாலையின் நடுவே விளையாடிக் கொண்டு இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

வன விலங்குகளுக்கு அருகில் சென்று புகைப்படம் எடுப்பதோ அல்லது வனவிலங்குகளை தொந்தரவு செய்வதோ கூடாது என்றும் வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுருத்தியுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp