மாநில அளவிலான கராத்தே சாம்பியன்சிப் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து பள்ளி மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்!!

கோவையில் நிஹான் ஷோட்டோகான் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இதில் சென்னை, கோவை, தூத்துக்குடி, மதுரை, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, திருச்சி, நெல்லை, பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நடைபெற்ற போட்டிகளை தமிழ்நாடு மாநில கராத்தே ஸ்போர்ட்ஸ் சங்க தலைவர் ஜேக்கப் தேவகுமார்,செயலாளர் அல்தாப் ஆலம் , மை கராத்தே சர்வதேச பள்ளி தியாகு நாகராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

போட்டிகள் வயது மற்றும் எடை, பட்டைய தகுதி அடிப்படையில் பிரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் நடைபெற்றது. கட்டா, குமித்தே ஆகிய முறையில் நடைபெற்ற இதில் ஆர்வமுடன் கலந்து கொண்ட போட்டியாளர்கள் கராத்தே கலையின் சண்டை மற்றும் சாகசங்களை அசத்தலாக செய்து காண்பித்தனர். முதலில் 4 இடம் பிடித்தோருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

-சீனி, போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp