கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது இந்த சூழ்நிலையில் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு பகுதியில்.
பாலாஜி கோவில் அருகில் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஒரு நிழல் குடை கட்டிடம் உள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பேருந்தில் ஏறி பயணம் செய்வதற்கு பேருந்து வரும் வரை காத்திருக்க இந்த நிழல் குடையை பயன்படுத்தி வந்தனர் இப்பொழுது வால்பாறையில் மழை பெய்து வருவதால் நேற்று பெய்த மழையில் மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து நிழல் குடைக்குள் புகுந்து பொது மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எனவே உடனடியாக நிழல் குடை கட்டிடத்திற்குள் புகுந்த சாக்கடை கழிவு கலந்த மழை நீரை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.