கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணார் பகுதி அருகே அமைந்திருக்கும் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் பல மாதங்களாகவே போதுமான மருத்துவர்கள் இல்லை என புகார் வந்த நிலையில்
இந்த மாதத்தின் முதல் வாரத்தில் காண்ட்ராக்ட் அடிப்படையில் சிறப்பு மகப்பேறு மருத்துவர் மற்றும் நரம்பியல் மருத்துவரையும் நியமித்துள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் திரு A . ராஜா அவர்கள் குறிப்பிட்டு இருந்த நிலையில் நேற்று அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அதிரடி சோதனை விஜிலென்ஸ் துறையினால் நடத்தப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அங்கு மருத்துவர்களின் வருகை பதிவேடு செவிலியர்களின் வருகை பதிவேடு மற்றும் நோயாளிகளின் பதிவேடுகள் எல்லாம் சோதனை செய்யப்பட்டன. சில ஊழியர்கள் லேப் ஸ்கேன் போன்றவைகளை வெளியில் இருந்து பணம் கொடுக்கும் நபர்களுக்கு மட்டும் எடுத்ததாகவும் மற்ற நோயாளிகளை சரியான சிகிச்சை பராமரிப்பு அளிக்கப்படாமல் இருந்ததாகவும் தெரிய வருகிறது.
மருத்துவர்கள் சரியான நேரத்தில் வராமல் தங்களுடைய சொந்த கிளினிக் செல்வதாகவும் தெரியவந்துள்ளது. இதனைக் குறித்து காரணங்கள் கேட்கப்பட்டு உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.