கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள இறச்சகுளம் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் உருவசிலையை திறக்க அனுமதி கொடுத்த காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் அதே பகுதியில் 10 ஆண்டுகளாக அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் மார்பளவு சிலையை மாற்றி முழு உருவ சிலையை அமைக்க வேண்டும் என்ற அனுமதி மறுக்கபடுகிறது.
என கூறி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இறச்சகுளம் பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் தினகரன் உட்பட 100 க்ற்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்திட நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுகுறித்து தினகரன் கூறுகையில் போலீசாரும் அதிகாரிகளும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் நாளை ஒருநாள் கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறும் அதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினார்.
-எல்.இந்திரா, நாகர்கோவில்.