ஆற்றுக்குள் முதலை இருப்பது உறுதியானதால் பீதியில் உறைந்த மக்கள்!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை லிங்காபுரம் பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே புதிதாக உயர்மட்ட மேம்பாலம் கட்டப் பட்டுவருகிறது. இந்நிலையில் நீரில் அடித்துவரப்பட்ட முதலைஒன்று ஆற்றங்கரையில் நடமாடுவது குறித்த விடியோ வெளியானது. அதில் ஆற்றங்கரை ஓரத்தில் அமைதியாக படுத்திருக்கும் முதலை சற்று நேரத்தில் பவானி ஆற்றில் இறங்குவது பதிவாகியுள்ளது.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பவானி ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அச்சத்தில் உள்ளோம். வனத் துறையினர் இந்த முதலையைப் பிடித்து வேறு பகுதியில் கொண்டு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்து இன்று சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், லிங்காபுரம் பகுதியில் பவானி ஆற்றில் முதலை நடமாட்டம் உள்ளது தெரியவந்துள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்குவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லக்கூடாது. அதேபோல் மீன் பிடிக்கச் செல்வோர் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp