கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலை 22 ஆவது கொண்டை ஊசி வளைவில் சாலையில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காட்டு யானை சாலையில் நின்றதினால் வாகனங்களை இயக்க முடியாமல் தவித்த வாகன ஓட்டிகள் பின்பு காட்டு யானை நகர்ந்து வனப் பகுதிக்குள் சென்ற பிறகு வாகனங்கள் இயக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணி செல்வதற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஒரு சில நாட்களில் இரவு நேரங்களில் ஆழியார் கவி அருவி அருகில் நிற்கும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் பயத்தில் வாகனத்தை இயக்கி வருகிறார்கள் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கூறியுள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.