கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள், டிரைவர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் காரில் கோவைக்கு சென்று கொண்டு இருந்தனர். கார் ஈச்சனாரி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது திடீரென பிரேக் பிடிக்காததால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக ஹேண்ட் பிரேக் பிடித்து காரை ஓரமாக நிறுத்தினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை அடுத்து காரின் முன் பகுதியில் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் தன்னுடன் காரில் பயணம் செய்தவர்களை அவசர அவசரமாக
கீழே இறங்கச் செய்தார்.
இதனை அடுத்து காரின் முன் பகுதியில் ஏற்பட்ட தீ அதிவேகமாக அனைத்து பகுதிகளுக்கும் பரவி கார் முழுவதும் எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இப்பகுதியில் கார் எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.