ஈச்சனாரி மேம்பாலத்தில் தீப்பிடித்தது கார்!! முற்றிலும் எரிந்து சேதம்!! பயணிகளின் நிலை என்ன..?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள், டிரைவர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் காரில் கோவைக்கு சென்று கொண்டு இருந்தனர். கார் ஈச்சனாரி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது திடீரென பிரேக் பிடிக்காததால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக ஹேண்ட் பிரேக் பிடித்து காரை ஓரமாக நிறுத்தினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை அடுத்து காரின் முன் பகுதியில் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் தன்னுடன் காரில் பயணம் செய்தவர்களை அவசர அவசரமாக
கீழே இறங்கச் செய்தார்.

இதனை அடுத்து காரின் முன் பகுதியில் ஏற்பட்ட தீ அதிவேகமாக அனைத்து பகுதிகளுக்கும் பரவி கார் முழுவதும் எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இப்பகுதியில் கார் எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp