கருமலை எஸ்டேட் பகுதி தடுப்பணையில் இறந்து கிடந்த கடமான்!! உடற்கூறாய்வுக்கு அனுப்பிய வனத்துறையினர்!!!

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் அதிகரித்து செல்கிறது. இந்த சூழ்நிலையில் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட கருமலை எஸ்டேட் பகுதி தடுப்பணையில் கடமான் தண்ணீரில் இறந்து கிடந்ததை பார்த்த பொது மக்கள் வனத்துறையிடம் தகவல் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உடனே அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் குடி தண்ணீர் தொட்டியில் விழுந்த கடமனை மீட்டு உடற்கூறாய்வுக்காக அய்யர் பாடி வன வனச்சரகம் பகுதிக்கு எடுத்துச் சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருமலை தடுப்பணை பகுதியில் இருந்து வால்பாறை பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்து வருவதால் அப்பகுதி தடுப்பணை கட்டிடத்தை உயர்த்துவதற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp