அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் ஆனித் திருவிழாவை முன்னிட்டும், பாரதப் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் இன்று காலை குளத்தூரில் நடைபெற்றது. இதில் பெரிய மாடு சின்ன மாடு என இரு பிரிவிலாக குளத்தூர் குறுக்குச்சாலை சாலையில் நடைபெற்றது.
பெரிய மாட்டு வண்டி பந்தயத்தை முன்னாள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். பெரிய மாடு முதல் பரிசு ஸ்ரீ மகா விஷ்ணு குமரட்டியாபுரம் முதல் பரிசை ரூபாய் 50121 வழங்கியவர் C.ராஜகுமார் அவர்கள் எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் மற்றும் புதூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் விஜயகுமார் அவர்கள், இரண்டாவது பரிசு எம் கண்ணன் வேலங்குளம் ரூபாய் 40121 வழங்கியவர்கள் தாமஸ் நாடார் பாண்டிநாடர் முத்துராஜா பிரதர்ஸ் குளத்தூர், 3வது பரிசு விஜயகுமார் மெடிக்கல் சண்முகபுரம் அவர்கள் ரூபாய் 30121 வழங்கியவர்கள் சந்திரன் நாடார் மற்றும் பாலசுப்பிரமணியம் அவர்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சின்ன மாட்டு வண்டி பந்தயத்தை முத்துப்பாண்டி நாடார் அவர்கள் துவக்கி வைத்தார்கள், சின்ன மாடு முதல் பரிசு RSசுரேஷ்குமார் ஐயங்கார் பேக்கரி k. துரைச்சாமிபுரம் மகாவிஷ்ணு குமரெட்டியாபுரம் ரூபாய் 30121 வழங்கியவர்கள் முத்துப்பாண்டி நாடார் சதீஷ்குமார் கௌசல்யா, 2வது பரிசு அழகர்பெருமாள் மேட்டூர் ரூபாய் 20121 வழங்கியவர்கள் ராஜா கோபால்சாமி மல்லுசாமி உலககோனார் அவர்கள், 3வது பரிசு விஜயக்குமார் மெடிக்கல் சண்முகபுரம் ரூபாய் 10121 வழங்கியவர்கள் ரவி செண்பகப் பெருமாள் அவர்கள்.
முதல் கோடி வாங்கும் சாரதிக்கு பரிசுகள் வழங்கியவர் சாந்தி சேகர் அவர்கள் ஏழாவது வார்டு உறுப்பினர் குளத்தூர் மற்றும் தங்கசெல்வம் நாடார் அவர்கள் வேப்பலோடை. இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் குளத்தூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.