கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதி தனுஷ்கோடி கொச்சின் நெடுஞ்சாலை நேற்று முன் தினம் அதிகமான மழை பெய்து வந்ததால் கேப் ரோட்டில் மண் சரிவு ஏற்பட்டு ரோடு முழுவதும் அடைக்கப்பட்டது தற்பொழுது அதை பயன்படுத்த மிகவும் வேகமாக சாலையை சுத்தம் செய்யும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒரு வழி பாதையாக மட்டுமே தற்பொழுது அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பின்பு அனைத்து சோதனைகளும் செய்து மீண்டும் மண் சரிவு ஏற்படாதவாறு முன்னேற்பாடு பாதுகாப்பு ஏற்படுத்தின பின்பு தான் முழுவதுமாக சாலை பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என அப்பகுதியை நேரில் ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் ராஜா அவர்களும் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த சாலை தடை செய்வதின் நிமித்தமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து மாற்றம் மிகப்பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது மிக விரைவில் சாலையை சரி செய்து பயன்பாட்டில் கொண்டு வர வேண்டுமென பகுதி பொதுமக்கள் மற்றும் ஜீப் ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.