கோவை உக்கடம் காவல்நிலையத்தில், எஸ். பி. சி. ஐ. டி ஏட்டாக பணியாற்றி வந்தவர் 47 வயதான மாரிமுத்து, இவர் இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு செல்லும்போது ஒப்பணக்கார வீதி பிரகாசம் சிக்னல் அருகே எதிரே வந்த மொபட்டும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது, இதில் தூக்கி வீசப்பட்ட மாரிமுத்துவுக்கு கண், தாடை, பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, மொபட்டில் வந்த 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் 3 பேரையும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர், அங்கு போலீஸ்காரர் மாரிமுத்துவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர், இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சூடான் நாட்டை சேர்ந்த 22 வயதான சுஹைப், மற்றும் 24 வயதான இப்ராஹிம், என்பது தெரிய வந்தது. இவர்களில் சுஹைப் டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி-பார்ம் படித்து வருகிறார், விபத்தில் தலையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இப்ராஹிம் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி. சி. ஏ இறுதியாண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே விபத்தில் படுகாயம் அடைந்த சூடான் நாட்டை சேர்ந்தவரிடம் இந்திய நாட்டின் ஆதார் அடையாள அட்டை இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது வெளிநாட்டுக்காரர்களுக்கு ஆதார் அட்டை எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் சூடான் நாட்டை சேர்ந்தவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.